பள்ளி மாணவிகளுக்கு போக்சோ விழிப்புணர்வு

அரியாங்குப்பம்; வீராம்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு போக்சோ குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வீராம்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் போக்சோ குறித்து அரியாங்குப்பம் போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியர் வெங்கடேஸ்வரி முன்னிலை வகித்தார்.சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் பங்கேற்று, பள்ளி மாணவிகளிடம் போக்சோ தொடர்பாக விளக்கம் அளித்தார்.

மேலும், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்பவர்கள் மீது போலீசில் புகார் செய்யலாம் என, விழிப்புணர்வு ஏற்படுத்தி, பேசினார். நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் பெண்போலீசார், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement