திருக்காமீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி ஆன்மிக நடைபயணம்

வில்லியனுார்; வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை மையமாக கொண்டு நேற்று மாலை 41வது ஆன்மிக நடைபயணம் சென்றனர்.
வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி நாளையொட்டி பக்தர்கள் ஆன்மிக நடைபயணம் மேற்கொள்கின்றனர். அதன்படி,நேற்று மாலை 6:00 மணிக்கு துவங்கிய41வது ஆன்மிக நடைபயணம்,நான்கு மாட வீதிகளில் உள்ள அம்மன், விநாயகர் கோவில், தென்கலை வரதராஜ பெருமாள் கோவில்கள் வழியாக சென்று வழிபட்டனர்.
தொடர்ந்து, அனந்தம்மாள் மடம் ஆஞ்சநேயர், ஏகாம்பர ஈஸ்வரன் கோவில், மூலக்கடை விநாயகர் கோவில், ராமபரதேசி சித்தர் பீடம், வி.தட்டாஞ்சாவடி தேங்காய் சுவாமி சீத்தர் பீடம், வி.மணவெளி, ஒதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பு வழியாக காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் தரிசனம் முடித்து, சங்கராபரணி ஆறு மேம்பாலம் வழியாக திருக்காஞ்சி கெங்கைகாவராக நதீஸ்வரர் கோவில், உறுவையாறு சாய்பாபா கோவில், கோட்டைமேடு வழியாக மீண்டும் திருக்காமீஸ்வரர் கோவிலை வந்தடைந்தனர்.வில்லியனுார் திருக்காமீஸ்வரர் ஆலய ஆன்மிக நடைபயணத்தில்திரளானபக்தர்கள், சிவனடியார்கள் மற்றும் சிவாச்சார்யர்கள்கலந்துகொண்டனர்.
மேலும்
-
ஆமதாபாத் விமான விபத்து : ஹெல்ப்லைன் எண்கள் வெளியீடு
-
இந்தியாவை உலுக்கிய 10 விமான விபத்துகள்
-
ஆமதாபாத் விமான விபத்து: மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராகுல் இரங்கல்
-
மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
-
விமான விபத்து: பிரிட்டன் பிரதமர் அதிர்ச்சி
-
மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்த விமானம்- 5 மாணவர்கள் உயிரிழப்பு: வேதனை காட்சிகள்