ரூ. 70 கோடி நலத்திட்ட உதவிகள்; கவர்னர், முதல்வர் வழங்கல்

புதுச்சேரி; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.

விழாவிற்கு, முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.

துறை செயலர் முத்தம்மா வரவேற்றார். விழாவினை, கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார். சபாநாயகர் செல்வம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை 2.0 கவர்னர், முதல்வர் ஆகியோர் துவக்கி வைத்து, 288 வீடு கட்டும் பயனாளிகளுக்கு 5.6 கோடி ரூபாய்க்கான பணி ஆணை மற்றும் ரூ. 2.5 லட்சம் முதல் தவணையை வழங்கினர்.

தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மேம்பாட்டு கழகம் சார்பில், 210 மாணவர்களுக்கு ரூபாய் 2.5 கோடியில் கல்வி கடன்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் 36.9 கோடி மதிப்பில் உட்கட்டமைப்பு வசதிகள் அர்ப்பணிப்பு, 19 கோடி மதிப்பில் 48 அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுக்குஅடிக்கல் நாட்டல், ரூ. 2 கோடி மதிப்பில், 122 ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் தொகை, 88 நபர்களுக்கு கலப்புத் திருமண ஊக்கத் தொகை உள்ளிட்ட70 கோடி ரூபாய் மதிப்புள்ள நலதிட்டங்கள் வழங்கப்பட்டது.

துறை இயக்குனர் இளங்கோவன் நன்றி கூறினார்.

Advertisement