வணிகர் நல நிதியுதவி ரூ.5 லட்சமாக அதிகரிப்பு
சென்னை: வணிகர் நல வாரியத்தில், வணிகர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள், மளிகை, ஜவுளி, காய்கறி, பழ வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நலனுக்காக, தமிழக அரசின் வணிகர் நல வாரியம் செயல்படுகிறது; இது, சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
அதன்படி, நலிவடைந்த வணிகர் குடும்பத்திற்கு, குடும்ப நல நிதி உதவியாக, 3 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதை உயர்த்தி வழங்குமாறு வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில், மே, 5ல் வணிகர் தின மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், 'வணிகர் நல நிதியுதவி 3 லட்சம் ரூபாயில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்' என, தெரிவித்தார். இதை செயல்படுத்தி தற்போது, அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும்
-
தமிழ் உலகமொழியாக மாற வேண்டும்: கவர்னர் ரவி பேச்சு
-
அ.தி.மு.க., கூட்டணியை கண்டு பயம்: இ.பி.எஸ்., விளாசல்
-
தமிழை ஒழித்ததே திராவிடத்தின் சாதனை: சீமான் பேச்சு
-
பி.டி.ஓ., பொறுப்பேற்பு
-
அமெரிக்காவில் சட்டசபை உறுப்பினர் சுட்டுக் கொலை; போலீஸ் வேடத்தில் மர்மநபர் வெறிச்செயல்!
-
சினிமா புகழுடன் ஹீரோ வேஷத்துடன் வந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்