சிறு தானியம் சாகுபடி செய்ய அறிவுரை
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, அடிமலைப்பட்டியில், உழவரை தேடி உழவர் நலத்துறை முகாம் நேற்று நடந்தது. சேலம் வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் தலைமை வகித்தார். அவர், விவசாயிக-ளுக்கு தேவையான விதைகள், இடுபொருட்கள், சாகுபடி தொழில்நுட்பம், மானிய விபரங்களை வழங்கினார்.
மேலும் அதிகளவில் சிறு தானியம் சாகுபடி செய்ய வேண்டும்; சொட்டு நீர் பாசனம் மூலம் உயிர் உரங்கள், நுண்ணுாட்டங்களை பயன்படுத்தி பயன் பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.
பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத், துணை வேளாண் அலுவலர் ராமு ஆகியோர், விதை நேர்த்தி குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
உதவி கால்நடை மருத்துவர் கண்மணி, தோட்டக்கலை உதவி அலுவலர் டேவிட், வேளாண் உதவி அலுவலர் சின்னதுரை உள்-ளிட்டோர் பேசினர். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்-தனர்.
அதேபோல் வீரபாண்டி, முருங்கப்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில், வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகாயினி தலைமை வகித்து பேசினார்.
உழவர் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் ஸ்ரீநிறைமதி, துணை அலுவலர் மூர்த்தி(பொ), பட்டு வளர்ச்சி துறை உதவி ஆய்வாளர்கள் பவித்ரா, வினித், துறை சார்ந்த தி
மேலும்
-
தமிழ் உலகமொழியாக மாற வேண்டும்: கவர்னர் ரவி பேச்சு
-
அ.தி.மு.க., கூட்டணியை கண்டு பயம்: இ.பி.எஸ்., விளாசல்
-
தமிழை ஒழித்ததே திராவிடத்தின் சாதனை: சீமான் பேச்சு
-
பி.டி.ஓ., பொறுப்பேற்பு
-
அமெரிக்காவில் சட்டசபை உறுப்பினர் சுட்டுக் கொலை; போலீஸ் வேடத்தில் மர்மநபர் வெறிச்செயல்!
-
சினிமா புகழுடன் ஹீரோ வேஷத்துடன் வந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்