மின்மாற்றியின் திறன் மேம்படுத்தும் பணி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி துணை மின்நிலையத்தில் மின்மாற்றியின் திறன் மேம்படுத்தப்படுத்தும் பணி நடைபெற இருப்பதால் அவ்வப்போது மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி துணைமின் நிலையத்தில் 16 எம்.வி.ஏ., திறன் கொண்ட மின்மாற்றி மெகா வோல்ட் ஆம்பியராக மேம்படுத்தும் பணி வரும் 17ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை நடக்கிறது.
இதனால், கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சுகர்மில், கருணாபுரம், எம்.ஆர்.என்.நகர்., நீலமங்கலம், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, சோமண்டார்குடி, நத்தமேடு, பொன்பரப்பட்டு, க.அலம்பலம், புது மோகூர், கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், நல்லாத்துார், வன்னஞ்சூர், சிறுவங்கூர், ரோடுமாமாந்துார், ஹாஜியாநகர், குடிகாடு ஆகிய பகுதிகளில் அவ்வப்போது மின்தடை ஏற்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.