கோப்பை வென்றது மும்பை: அல்டிமேட் டேபிள் டென்னிசில்

ஆமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில் 8-4 என ஜெய்ப்பூரை வீழ்த்தியது.
ஆமதாபாத்தில் (குஜராத்) அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வது சீசன் நடந்தது. இதன் பைனலில் மும்பை, ஜெய்ப்பூர் அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் மும்பையின் லிலியன் பார்டெட் 2-1 என ஜெய்ப்பூரின் கனக் ஜாவை வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் ஜெய்ப்பூரின் ஸ்ரீஜா அகுலா 1-2 என மும்பையின் பெர்னாடெட் சோக்சிடம் தோல்வியடைந்தார்.
கலப்பு இரட்டையர் போட்டியில் மும்பையின் ஆகாஷ் பால், பெர்னாடெட் சோக்ஸ் ஜோடி 3-0 என ஜெய்ப்பூரின் ஜீத் சந்திரா, பிரிட் ஏர்லேண்ட் ஜோடியை வென்றது. ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் ஜீத் சந்திரா (ஜெய்ப்பூர்) 2-1 என அபினந்தை (மும்பை) வீழ்த்தினார்.
நான்கு போட்டிகளின் முடிவில் மும்பை அணி 8-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றது.