ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இந்தியா: புரோ லீக் ஹாக்கியில் அதிர்ச்சி

ஆன்ட்வெர்ப்: புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி 2-3 என, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் 6வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக நெதர்லாந்து சென்றுள்ள இந்திய ஆண்கள் அணி, தனது 14வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை மீண்டும் சந்தித்தது. இதில் ஏமாற்றிய இந்திய அணி 2-3 என தோல்வியடைந்தது. இந்திய அணிக்கு சஞ்சய் (3வது நிமிடம்), தில்பிரீத் சிங் (36வது) தலா ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் பிராண்ட் (4வது நிமிடம்), கோவர்ஸ் (5வது), பர்ன்ஸ் (18வது) தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணி, தொடர்ச்சியாக 6வது தோல்வியை பெற்றது.
இதுவரை விளையாடிய 14 போட்டியில், 5 வெற்றி, 9 தோல்வி என 15 புள்ளிகளுடன் இந்திய அணி 7வது இடத்தில் உள்ளது. இந்திய அணி, தனது கடைசி இரண்டு போட்டியில் பெல்ஜியத்தை (ஜூன் 21, 22) எதிர்கொள்கிறது.


பெண்கள் ஏமாற்றம்: லண்டனில் நடந்த பெண்களுக்கான லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மீண்டும் மோதின. இதில் இந்திய அணி 1-2 என தோல்வியடைந்தது. இந்திய அணிக்கு வைஷ்ணவி (3வது நிமிடம்) ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு லாடன் (37 வது நிமிடம்), பிக்கரிங் (60வது) தலா ஒரு கோல் அடித்தனர்.இதுவரை விளையாடிய 10 போட்டியில், 2 வெற்றி, 6 தோல்வி என 9 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.



@quote@

மன்பிரீத் '400'


முன்னாள் இந்திய கேப்டன் மன்பிரீத் சிங் 33, தனது 400வது சர்வதேச போட்டியில் பங்கேற்றார். இம்மைல்கல்லை எட்டிய 2வது இந்திய வீரரானார். ஏற்கனவே திலிப் டிர்கி (412 போட்டி) இந்த இலக்கை கடந்திருந்தார். quote

Advertisement