குரூப் 1 தேர்வு 1819 பேர் ஆப்சென்ட்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நடந்த குரூப் 1 தேர்வில் 1819 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி.சார்பில் உதவி கலெக்டர், டி.எஸ்.பி, வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப் 1, குரூப் 1 ஏ முதல் நிலை தேர்வுகள் நேற்று நடந்தது.
இதில் விருதுநகர் மாவட்டத்தில் 29 ஹால்களில் தேர்வு நடந்தது. 6 ஆயிரத்து 977 பேர் பங்கேற்க வேண்டிய நிலையில், 5 ஆயிரத்து 158 பேர் மட்டுமே பங்கேற்றனர். இது 73.9 சதவீதமாகும். ஆயிரத்து 819 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை தேர்வு நேரம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை 8:30 மணிக்கு முன்பே தேர்வு மையங்களில் தேர்வர்கள் குவிந்திருந்தனர்.
அலைபேசி, டிஜிட்டல் வாட்ச் உட்பட எந்த வித எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்ப சாதனங்கள் கொண்டு வர கூடாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பலத்த சோதனைக்கு பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும்
-
மருத்துவமனையில் சோனியா அனுமதி
-
'ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தாது'
-
இரும்பு பாலம் இடிந்து விழுந்து 4 பேர் பலி; 20 பேர் மாயம்
-
கைதான ஏழு ஆண்டுக்கு பின் துருக்கி செய்தியாளருக்கு 'துாக்கு'
-
டூவீலரில் கடத்தப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள 40 கிலோ கஞ்சா பறிமுதல்; தப்பிய இருவருக்கு சுங்கத்துறையினர் வலை
-
வீடு கட்டி தருவதாக 70,000 பேரை ஏமாற்றி ரூ.2,700 கோடி சுருட்டல்