ஸ்டேஷன்களின் அந்தஸ்து உயர்வு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் காவல்துணை கோட்டத்தில், இதுவரை சப் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் இருந்த மம்சாபுரம், கூமாபட்டி, நத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷன்கள் தற்போது இன்ஸ்பெக்டர்கள் அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது ஸ்ரீவில்லிபுத்துார், கிருஷ்ணன் கோவில், வத்திராயிருப்பு போலீஸ் ஸ்டேஷன்கள் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் வத்திராயிருப்பு தனி தாலுகாவாக உருவாக்கப்பட்ட நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அதிகரித்து வரும் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மம்சாபுரம், கூமாபட்டி போலீஸ் ஸ்டேஷன்களும் தற்போது மதுரை -கொல்லம் நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டதால் எதிர்கால நலன் கருதி நத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனும் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்டுள்ள இந்த ஸ்டேஷன்களுக்கு விரைவில் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement