சாத்துாரில் ஆமை வேகத்தில் நடக்கும் சுகாதார வளாகப் பணி

சாத்துார்: சாத்துார் மதுரை பஸ் ஸ்டாப்பில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பொது சுகாதார வளாகம் கட்டும் பணியை விரைந்து முடிக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மதுரை பஸ் ஸ்டாப்பில் நான்கு மாதங்களுக்கு முன்பு பொது சுகாதார வளாகம் கட்டும் பணியும் துவங்கியது.இந்தப் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் வெம்பக்கோட்டை ரோடு மதுரை பஸ் ஸ்டாப் பகுதிகளில் வசிக்கும் மக்களும்உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளும் தங்கள் இயற்கை உபாதையை கழிக்க வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த பகுதியில் பொது சுகாதார வளாகம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.இதன் காரணமாக மக்கள் லோடு ஆட்டோ ஸ்டாண்ட் நிறுத்தும் பகுதியை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் அதிகரித்து வருகிறது.

எனவே ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும்.

Advertisement