முதுநிலை நீட் தேர்வு ரத்து மாணவர்கள் ஏமாற்றம்
ராசிபுரம்: நாடு முழுவதும், நேற்று முதுநிலை நீட் தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். நாடு முழுவதும், 195 நகரங்களில், 447 மையங்களில் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை, 9:00 மணி மற்றும் மாலை, 3:30 மணி ஆகிய இரண்டு ஷிப்டுகளாக தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இரண்டு ஷிப்டுகளாக தேர்வு நடப்பதால் கடினமான கேள்வித்தாள் வரும். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது முறைப்படி என்.டி.ஏ., வெப்சைட்டில் வெளியிடப்பட்டிருந்தது. இதை கவனிக்காத சில மருத்துவ மாணவர்கள், நேற்று காலை ராசிபுரம் அடுத்த தனியார் கல்லுாரி தேர்வு மையத்திற் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதேபோல், பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீசாரும் யாரும் வராததை பார்த்து ஏமாற்றமடைந்தனர். அதன்பிறகுதான் தேர்வு ரத்தானது தெரிந்தது. இதையடுத்து போலீசாரும் திரும்பி சென்றனர்.
மேலும்
-
கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர்: சொல்கிறார் அண்ணாமலை!
-
அரைவேக்காட்டு தனமாக அறிக்கை விடும் இ.பி.எஸ்.,: முதல்வர் ஸ்டாலின் கடும் சாடல்
-
கோவை, நீலகிரிக்கு 'ஆரஞ்சு அலெர்ட்'; அவலாஞ்சி, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் மூடல்!
-
2027 மார்ச்சில் மக்கள் தொகை கணக்கெடுப்பு; அரசாணையை கெஜட்டில் வெளியிட்டது மத்திய அரசு
-
மசூதியில் நிகழ்ந்த திடீர் குண்டுவெடிப்பில் 3 பேர் படுகாயம்; காஷ்மீரில் பதற்றம்
-
வானில் பறந்த விமானங்கள் அடுத்தடுத்து கோளாறு; பயணிகள் பீதி