அமெரிக்கா குறி வைத்த அதே அணுசக்தி நிலையம்: ஈரானில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்

டெஹ்ரான்; பங்கர் பஸ்டர் குண்டுகள் மூலம் அமெரிக்கா குறி வைத்த ஈரானின் அணுசக்தி நிலையம் மீது இஸ்ரேல் மீண்டும் பயங்கர தாக்குதலை அரங்கேற்றி இருக்கிறது.
ஈரான்-இஸ்ரேல் நாடுகள் இடையே நீடித்து வரும் போரில், அமெரிக்காவும் நுழைந்துள்ளது. தினமும் இருநாடுகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வரும் சூழலில், உயிரிழப்புகளும், சேதங்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையமான போர்டோ மீது மீண்டும் இஸ்ரேல் அதிரடியாக தாக்குதலை தொடங்கி இருக்கிறது. இந்த அணுசக்தி நிலையமானது பூமிக்கடியில் செயல்பட்டு வருகிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதலை ஈரான் நாட்டு அரசு தொலைக்காட்சி செய்தியாக வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளது.
தாக்குதலின் போது ஏதேனும் சேதம் ஏற்பட்டதா என்பது பற்றிய எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை. இந்த செறிவூட்டப்பட்ட அணுசக்தி நிலையம் மீது தான் சில நாட்கள் முன்பு அமெரிக்காவும் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது நினைவு இருக்கலாம்.
போர்டோ அணுசக்தி நிலையம் மட்டுமல்லாது, தலைநகரில் உள்ள பிரபல ஈவின் என்ற சிறைச்சாலை மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இதுதவிர, அங்குள்ள பாதுகாப்பு நிலைகளையும் குண்டுகள் வீசி தாக்கி இருக்கிறது.

மேலும்
-
ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட டிரம்ப் நினைப்பதற்கு காரணம் என்ன? அமெரிக்கா புது விளக்கம்
-
உலகத்தை வழி நடத்துவதே இந்துத்துவாவின் நோக்கம்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்
-
ஏ.சி.,புறநகர் ரயில்களுக்கு வரவேற்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
-
ஜி.பி.எஸ்., சிக்னலில் இடையூறு; ஜம்மு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மீண்டும் டில்லிக்கு திரும்பியது!
-
விண்வெளிக்கு பயணிக்கும் ஆந்திரா பெண் பொறியாளர் ஜானவி!
-
மீண்டும் களைகட்டியது காசிமேடு