ஓட்டு எண்ணிக்கையின்போது குண்டுவெடிப்பு: மே.வங்கத்தில் 10 வயது சிறுமி உயிரிழப்பு

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலம் கலிகஞ்ச் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது வெடிகுண்டு வெடித்ததில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கலிகஞ்ச் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்கி நடைபெற்று கொண்டிருந்தது, அப்போது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கணிசமான ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தபோது, பரோசந்த்கர் கிராமத்தில் வெடிகுண்டு வெடித்தது. வெடிகுண்டு வெடித்ததில் 4 ஆம் வகுப்பு மாணவியான தமன்னா கதுன் என்ற அந்த குழந்தை பலத்த காயம் அடைந்து உயிரிழந்தது.
இந்த சம்பவம் மாநிலத்தில் அரசியல் பதட்டங்களை மீண்டும் தூண்டியுள்ளது, வழக்கமான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் போது வன்முறையை துாண்டும் என்று திரிணாமுல் மீது பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது.
பா.ஜ., ஐ.டி., செல் தலைவர் அமித் மாளவியா கூறியதாவது:
டி.எம்.சி.யின் கொண்டாட்டம் மீண்டும், ரத்தத்துடன் முடிகிறது. ஆளும் கட்சியின் வெற்றி ஊர்வலத்தின் போது குண்டுகள் வீசப்பட்டது, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் சிறுமி உயிரிழந்தார்.
இவ்வாறு அமித் மாளவியா கூறினார்.
மேலும்
-
ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட டிரம்ப் நினைப்பதற்கு காரணம் என்ன? அமெரிக்கா புது விளக்கம்
-
உலகத்தை வழி நடத்துவதே இந்துத்துவாவின் நோக்கம்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்
-
ஏ.சி.,புறநகர் ரயில்களுக்கு வரவேற்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
-
ஜி.பி.எஸ்., சிக்னலில் இடையூறு; ஜம்மு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மீண்டும் டில்லிக்கு திரும்பியது!
-
விண்வெளிக்கு பயணிக்கும் ஆந்திரா பெண் பொறியாளர் ஜானவி!
-
மீண்டும் களைகட்டியது காசிமேடு