மறைமலைநகர் சிப்காட் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

மறைமலை நகர்:குண்டும் குழியுமாக உள்ள, மறைமலை நகர் சிப்காட் சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மறைமலை நகர் சிப்காட் பகுதியில், 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள், தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை வந்து செல்கின்றன.
சிப்காட் பகுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சாலை, காமராஜர் சாலை, பெரியார் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில், பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு, குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இதனால், வேலை முடித்து இரவில் செல்லும் தொழிலாளர்கள், தடுமாறி வருகின்றனர். எனவே, சாலை நடுவே உள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீனாவில் வரலாறு காணாத பருவமழை; வீடுகளை இழந்த 80,000 பேர்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 சரிவு; இன்றைய நிலவரம்!
-
இந்திய விவசாயத்திற்கு பிரத்யேக இயந்திரம் உருவாக்கம்
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 5 பேர் ஆஜராக கோர்ட் உத்தரவு
-
எக்ஸ்.எல்.,-750 ட்ரான்சால்ப் ஹோண்டாவின் 'அப்டேட்டட்' அட்வெஞ்சர் டூரர்
-
சிட்ரான் 'சி3 ஸ்போர்ட்ஸ் எடிஷன்'
Advertisement
Advertisement