தவறி விழுந்த யானை பலி

மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டம்மறையூர் அருகே பாறையில் இருந்து தவறி கீழே விழுந்து ஆண் காட்டு யானை இறந்தது.
மறையூர் அருகே கரிமுட்டி நீர்வீழ்ச்சி அருகே விளை நிலத்தில் ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது. வனத்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர். அதில் பாறையில் இருந்து கால் தவறி கீழே விழுந்து இறந்ததாக தெரியவந்தது. தேக்கடியைச் சேர்ந்த வனவிலங்கு கால்நடை டாக்டர்கள் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு அதன் வயதுஉள்ளிட்ட கூடுதல் விபரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீனாவில் வரலாறு காணாத பருவமழை; வீடுகளை இழந்த 80,000 பேர்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 சரிவு; இன்றைய நிலவரம்!
-
இந்திய விவசாயத்திற்கு பிரத்யேக இயந்திரம் உருவாக்கம்
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 5 பேர் ஆஜராக கோர்ட் உத்தரவு
-
எக்ஸ்.எல்.,-750 ட்ரான்சால்ப் ஹோண்டாவின் 'அப்டேட்டட்' அட்வெஞ்சர் டூரர்
-
சிட்ரான் 'சி3 ஸ்போர்ட்ஸ் எடிஷன்'
Advertisement
Advertisement