தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி; ஜூலை 5ல் மதுரை, சிவகாசி; ஜூலை 6ல் திண்டுக்கல், தேனி

மதுரை: பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இன்ஜினியரிங் கவுன்சிலிங் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தினமலர், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி ஜூலை 5ல் மதுரை, சிவகாசி, ஜூலை 6ல் திண்டுக்கல், தேனி என இரண்டு நாட்கள் நடக்கின்றன.

ஜூலை 5 ல் மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் மதியம் 3:00 - 6:00 மணிக்கும், சிவகாசியில் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கம்மவார் திருமண மண்டபத்தில் காலை 10:00- 1:00 மணிக்கும் நடக்கிறது. இரண்டாம் நாளில்(ஜூலை 6) திண்டுக்கல்லில் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள பி.வி.கே., மகாலில் மதியம் 3:00 - 6:00 மணிக்கும், தேனியில் பாரஸ்ட் ரோட்டில் உள்ள அன்னப்பராஜா மஹாலில் காலை 10:00 - 1:00 மணிக்கும் நடக்கிறது.

அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடையலாம். நிகழ்ச்சியில், இந்தாண்டு மாணவர்கள் பெற்றுள்ள 'கட் ஆட்' மதிப்பெண்ணுக்கு எந்த கல்லுாரியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும், ஆன்லைன் கவுன்சிலிங்கில் அறிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள் என்ன, சிறந்த கல்லுாரியை தேர்வு செய்வது எப்படி, கவுன்சிலிங்கில் புதிய மாற்றங்கள் என்ன, சரியான சாய்ஸ் பில்லிங் உட்பட டி.என்.இ.ஏ., இன்ஜி., கவுன்சிலிங் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் அதிகாரிகள், நிபுணர்கள் நேரடி விளக்கம் அளிக்க உள்ளனர்.

இத்துடன் 'வாய்ப்பு மிகுந்த இன்ஜினியரிங் பிரிவுகள்' என்ற தலைப்பில் கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசுகிறார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவுக்கு 95667 77833 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு RGN என்று டைப் செய்து அனுப்பலாம். அனுமதி இலவசம்.

இந்நிகழ்ச்சியை கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், சேரன் குரூப் ஆப் இன்ஸ்டிடியூட்ஸ், ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜி., ஆகியன இணைந்து வழங்குகின்றன.

Advertisement