பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்டம் தக்காளி வீச்சு; 40 பேர் கைது

புதுச்சேரி : பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், மீண்டும் பணி வழங்ககோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டபோது, பொதுப்பணித்துறை அலுவலகம் மீது தக்காளி வீசியதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி, பொதுப்பணித்துறையில் 2016ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள், தேர்தல்துறை மூலம் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், அரசு உடனடியாக மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்டக்குழு தலைவர் தெய்வீகன் தலைமையில் நேற்று பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பொதுப்பணித்துறை அலுவலகம் மீது சிலர் தக்காளிகளை வீசினர்.
அந்த தக்காளிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீதும் விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து, ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்
-
சீனாவில் வரலாறு காணாத பருவமழை; வீடுகளை இழந்த 80,000 பேர்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 சரிவு; இன்றைய நிலவரம்!
-
இந்திய விவசாயத்திற்கு பிரத்யேக இயந்திரம் உருவாக்கம்
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 5 பேர் ஆஜராக கோர்ட் உத்தரவு
-
எக்ஸ்.எல்.,-750 ட்ரான்சால்ப் ஹோண்டாவின் 'அப்டேட்டட்' அட்வெஞ்சர் டூரர்
-
சிட்ரான் 'சி3 ஸ்போர்ட்ஸ் எடிஷன்'