கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

திருவனந்தபுரம்: கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. 3 மாவட்ட கல்வி நிலையங்களுக்கு முன் எச்சரிக்கையாக விடுமுறையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. மழை மேலும் நீடிக்கும் என்ற நிலையில் கண்ணூர், காசர்கோடு, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வானிலை மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து, வயநாடு, காசர்கோடு, கண்ணூர் ஆகிய 3 மாவட்ட கலெக்டர்கள் நாளை (ஜூலை19) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். இந்த விடுமுறை பயிற்சி நிறுவனங்கள், மத வழிபாட்டு பள்ளிகள், சிறப்பு வகுப்புகள் நடத்தும் கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.
5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
சிறப்பு பயிற்றுனர் சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு கடிதம்
-
தர்மபுரியில் பா.ஜ., - அ.தி.மு.க., நிர்வாகிகள் கலந்துரையாடல்
-
மக்காச்சோளம் விலை சரிவு அரூர் விவசாயிகள் கவலை
-
ஆஞ்சநேயர் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
-
வனத்தில் பிளாஸ்டிக் குப்பை அகற்றிய கல்லுாரி மாணவர்கள்
-
சரக ஹாக்கி போட்டி மாணவர்களுக்கு பாராட்டு