'வாகனங்கள் நிறுத்த விரைவில் இடம் தேர்வு'



ஏற்காடு: சேலம் எஸ்.பி., கவுதம் கோயல், ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது வழக்கு விப-ரங்கள், ஸ்டேஷனுக்கு சொந்தமான துப்பாக்கிகள், தோட்டாக்கள் சரியாக உள்ளதா என்பதை பார்வையிட்டார்.
தொடர்ந்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது: ஏற்காட்டில் அதிக சுற்றுலா பயணியர் வருவதால், போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் வாகனங்களை நிறுத்த, உரிய இடம் தேர்வு செய்யப்படுகிறது. அதனால் விரைவில், சிரமமின்றி சுற்றுலா பயணியர் சென்று வரலாம். அதேநேரம் வாகன நிறுத்து-மிடம் ஏற்பாடு செய்யும் வரை, எந்த வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்காடு இன்ஸ்பெக்டர் வாசுகி
உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.

Advertisement