தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை: மேற்கு மா.செ., அறிவுரை

இடைப்பாடி: தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை

யில், இடைப்பாடி, சங்ககிரி சட்டசபை தொகுதிகளில் தொய்வு ஏற்பட்டதாக, கட்சி தலைமையால், சேலம் மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதிக்கு தகவல் கிடைத்தது. இதனால் இடைப்பாடி தொகுதி, தி.மு.க., ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிக-ளுடன் ஆலோசனை கூட்டம், இடைப்பாடியில் நேற்று நடந்-தது.

அதில் மாவட்ட செயலர் செல்வகணபதி பேசுகையில், ''உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். வரும், 26ல், இதேபோல் கூட்டம் நடக்கும். அப்போது ஒவ்வொரு ஓட்டுச்சாவ-டிகளிலும் தலைமையால் நிர்ணயித்த எண்ணிக்கைக்கு ஏற்ப, உறுப்பினர் சேர்க்கையை பூர்த்தி செய்ய வேண்டும்,'' என்றார்.தொகுதி பார்வையாளர் முரு-கவேல், மாவட்ட துணை செயலர் சுந்தரம், சம்பத்குமார், நகர செயலர் பாஷா, ஒன்றிய பொறுப்பாளர்கள் நல்லதம்பி, பூவாக-வுண்டர், பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல் சங்ககிரியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, நகர செயலர் முருகன், ஒன்றிய பொறுப்பாளர்கள்
பங்கேற்றனர்.

Advertisement