காட்டெருமை முட்டி சினை பசு பலி

ஆத்துார்: ஆத்துார், காளிசெட்டியூரை சேர்ந்த விவசாயி பழனிமுத்து, 50. இவரது நிலம், கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. அங்கு நேற்று, வனப்

பகுதியில் இருந்து,

7 காட்டெருமைகள் புகுந்து மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை நாசப்படுத்தின. தொடர்ந்து, 4 மாதம் சினையாக இருந்த, பசு மாட்டை முட்டித்தள்ளின. இதில் குடல் சரிந்து பசு உயிரிழந்தது. ஆத்துார் கோட்ட வனத்துறையினர், கால்-நடைத்துறையினர், இறந்த மாட்டை, உடற்கூராய்வு செய்து அடக்கம் செய்தனர். ஆனால் பலியான மாடு, சேதமான பயிர்க-ளுக்கு இழப்பீடு வழங்க, விவசாயி வலியுறுத்தினார்.

Advertisement