பீடி, கஞ்சா, மொபைல் போன்களை பந்தாக மாற்றி சிறைக்குள் வீசியது யார்?
சேலம்: சேலம் மத்திய சிறை, 16வது பிளாக்கில், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, 'டேப்' சுற்றப்பட்ட பந்து போன்ற, 6 உருண்-டைகள் கிடந்தன.
சிறை வெளியே பின்புறம் இருந்து யாரோ வீசியது தெரிந்தது. அப்போது பணியில் இருந்த
சிறை காவலர் தமிழ்செல்வன், 6 உருண்டைகளையும் எடுத்துச்சென்று, சிறை அலுவலர்களிடம் ஒப்படைத்தார். பிரித்து பார்த்த போது, 500 பீடிகள், 700 கிராம் கஞ்சா, 4 பாக்கெட் சிகரெட், 2 மொபைல் போன், 4 சார்ஜர், கஞ்சா பயன்படுத்துவதற்கான பேப்பர் ரோல் ஆகியவை இருந்-ததால் அதிர்ச்சி அடைந்தனர். பின் சிறை அலுவலர் குமார்(பொ) புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் சிறை பின்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் மர்ம நபர்கள் நடமாட்டம் பதிவாகி உள்ளதா என, ஆய்வு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!
-
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
-
அட்லாண்டா சென்ற விமானம் தீப்பற்றி எரிந்தது; லாஸ் ஏஞ்சல்சில் அவசர தரையிறக்கம்
-
பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை; போட்டுப் பழகிய பை!
-
அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை
-
தேசிய நெடுஞ்சாலை குறுக்கே ரிங்ரோடு பாலம் பணி மந்தகதியால் வாகன ஓட்டிகள் அவதி
Advertisement
Advertisement