ஆஞ்சநேயர் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

தர்மபுரி: ஆடி மாத, முதல் சனிக்கிழமையையொட்டி, ஆஞ்சநேயர் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி, தர்மபுரி எஸ்.வி., சாலையிலுள்ள, அபய ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று, சுவா-மிக்கு பால், நெய், இளநீர், பழங்கள், சந்தனம் உட்பட நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது.


அதன் பிறகு, சிறப்பு அலங்காரத்தில் அபய ஆஞ்சநேயர் பக்தர்க-ளுக்கு அருள் பாலித்தார். அதேபோல், நல்லம்பள்ளி அருகே, முத்தம்பட்டி வன பகுதியில் உள்ள, வீர ஆஞ்சநேயர், தொப்பூர் கணவாய் பகுதியிலுள்ள மன்றோ குளக்கரை ஜெய வீர ஆஞ்சநேயர், தர்மபுரி மின் பகிர்மான அலுவலகத்தில் உள்ள வீர ஆஞ்ச
நேயர் உட்பட, தர்மபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஆஞ்ச-நேயர் கோவில்களிலும் நடந்த சிறப்பு வழிபாட்டில், திரளான பக்-தர்கள் சுவாமி
தரிசனம் செய்தனர்.

Advertisement