இலங்கை தமிழர் திருமண பதிவுக்கு சிறப்பு முகாம்கள்
சென்னை : மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம்களை, பதிவுத்துறை நடத்த உள்ளது.
இது குறித்து, பதிவுத்துறை தலைவர் அறிவிப்பு:
மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்வதற்காக, சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை வேலை நாட்களாக உள்ள சார் -- பதிவாளர் அலுவலகங்களில், வரும் 26ம் தேதியும், வேலை நாட்களாக இல்லாத இதர அலுவலகங்களில், 25ம் தேதி வெள்ளிக்கிழமையும் திருமணங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்த, பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதை, திருமண பதிவுக்காக காத்திருக்கும் இலங்கை தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்; தேசமே முதன்மையானது என்கிறார் காங்., எம்.பி., சசி தரூர்
-
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!
-
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
-
அட்லாண்டா சென்ற விமானம் தீப்பற்றி எரிந்தது; லாஸ் ஏஞ்சல்சில் அவசர தரையிறக்கம்
-
பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை; போட்டுப் பழகிய பை!
-
அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை
Advertisement
Advertisement