அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் நன்றி

விருத்தாசலம் : கடலுார் மேற்கு மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டங்களில் பங்கேற்று அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு வரவேற்பு அளித்த நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ.. நன்றி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

'மக்களை கா்பபோம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, கடந்த 14ம் தேதி கடலுார் மேற்கு மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம், திட்டக்குடி சட்டசபை தொகுதிகளில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார்.

முன்னதாக, பெண்ணாடம், கங்கைகொண்டான் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 16ம் தேதி புவனகிரியில் நடந்த ரோடு ேஷா மற்றும் பிரசார கூட்டம், சிதம்பரத்தில் நடந்த விவசாயிகள் சந்திப்பு கூட்டத்திலும் பேசினார். இந்நிகழ்ச்சிகளில் திரளாக பங்கேற்ற விவசாய பிரதிநிதிகள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement