கள்ளக்குறிச்சியில் கார் டயர் வெடித்து விபத்து; ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர்-விழுப்புரம் நெடுஞ்சாலையில், மணலூர்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த கார், டயர் வெடித்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பருவநிலை மாற்றத்தால் குழந்தைகளின் கல்வி பாதிப்பு: ஐ.நா., அறிக்கை
-
விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடும் மேற்கத்திய ஊடகங்கள்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
-
சட்டசபையில் ரம்மி விளையாட்டு: அஜித் பவார் கட்சி அமைச்சரால் சர்ச்சை
-
ஆபரேஷன் சிந்தூர் பற்றி பார்லி.யில் மத்திய அரசு பேச தயார்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ
-
சிவகங்கையில் விவசாயி கொடூர கொலை: தலையை தேடும் போலீஸ்: மர்ம நபர்கள் வெறிச்செயல்
-
இ.பி.எஸ்., பேச்சில் உள்நோக்கமா; நயினார் நாகேந்திரன் பதில்
Advertisement
Advertisement