சமூகநீதி பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: அன்புமணி

விழுப்புரம்: ''சமூகநீதி பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை. ஒரு ஓட்டுக் கூட தி.மு.க.,விற்கு விழக்கூடாது'' என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீட்டை செயல்படுத்தாததை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி பேசியதாவது: எத்தனை முறை நானும், ஐயாவும் பார்த்தோம். நிச்சயமாக நான் செய்கிறேன் என்று பொய்யைச் சொன்னார். இந்த தேர்தலில் பார்க்கத்தான் போகிறோம். நாங்கள் புள்ளைக்கு படிப்பும், வேலையும் கேட்டோம். பீஹாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்துவிட்டார்கள்.
முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டும் அதிகாரம் இல்லையா? இந்திய புள்ளி விவர சட்டத்தின் படி, பஞ்சாயத்து தலைவருக்கு அவரது பஞ்சாயத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் உண்டு. உங்களுக்கு கிடையாதா? எவ்வளவு காலம் பொய் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். சமூகநீதி பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை.
ஒரு ஓட்டுக் கூட தி.மு.க.,விற்கு விழக்கூடாது. தி.மு.க.,விற்கும், சமூகநீதிக்கும் சம்பந்தம் இல்லை. காந்தி 32 ஆண்டுகளில் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது. ராமதாஸ் 45 ஆண்டுகள் போராடியும் நமக்கு விடுதலை கிடைக்கவில்லை. நம்மை அடிமையாக வைத்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.






மேலும்
-
அறிவியல் ஆயிரம் : நிலவு மண்ணில் தண்ணீர்
-
ராகுலின் முதிர்ச்சியற்ற தன்மை... மார்க்சிஸ்ட் கண்டனம்; இண்டி கூட்டணியில் புகைச்சல்
-
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாணவர்கள் இருவர் பலி
-
பெங்களூரு கூட்டநெரிசல் சம்பவம்; சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட பா.ஜ., வலியுறுத்தல்
-
மேய்ச்சலுக்கு சென்ற பெண் கொலை; கொலையாளிகளை அடையாளம் காணுவதில் திணறும் அரசு: சீமான்
-
விரைவாக பணம் செலுத்தும் வசதி; இந்தியாவின் யு.பி.ஐ., உலக அளவில் முதலிடம்: ஐ.எம்.எப்., பாராட்டு