அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்!

2

வாஷிங்டன்: வாஷிங்டனில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.


அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள கிர்க்லேண்ட் பகுதியில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திற்கு, மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். லாஸ் ஏஞ்சல்சில் ஒரு வாகனம் பெரிய கூட்டத்திற்குள் புகுந்த சில மணி நேரங்களுக்கு பிறகு இது நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement