ஈரான் நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து!

டெஹ்ரான்: ஈரானில் மிக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து பதற்றத்தை உருவாக்கி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 670 கி.மீ.,தொலைவில் அபாடன் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலை 1912ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஈரான் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒட்டு மொத்த எரிபொருளில் இங்கு மட்டுமே 25 சதவீதம் உற்பத்தியாகிறது.
இந் நிலையில், இந்த ஆலையில் உள்ள பழுதுபார்க்கும் ஒரு அலகில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியது.
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பந்தப்பட்ட ஆலைக்கு சென்று தீயணைக்கும் பணியில் இறங்கினர்.
இந் நிலையில் இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளதாக, அந்நாட்டின் பார்லி. துணை சபாநாயகர் அலி நிக்சத் கூறினார்.
மேலும்
-
பெனால்டி இல்லாமல் அதிக கோல்கள்: மெஸ்ஸி புதிய சாதனை
-
லண்டன் இஸ்கான் உணவகத்தில் அசைவ உணவை சாப்பிட்ட நபர்; அதிர்ச்சி சம்பவம்
-
உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்; ஆனால்...: புடின் சொல்ல வருவது என்ன?
-
அதெல்லாம் ராணுவ ரகசியம்: சீமான் பேட்டி
-
அவதுாறு பரப்பும் அமைச்சர் நேரு; இ.பி.எஸ்., பதிலடி
-
200 ஆண்டுகள் பழமையான அரசுப் பள்ளி கட்டட மேற்கூரை இடிந்து விபத்து!