உலக அமைதி வேண்டி திருவாசகம் முற்றோதல்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உலக அமைதி வேண்டி திருவாசகம் முற்றோதல் ஞானப்பெருவேள்வி நிகழ்ச்சி நடந்தது.
உளுந்துார்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் திருப்பணி சிறப்பாக நடைபெற வேண்டியும், உலக அமைதி வேண்டியும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு சாரதா ஆசிரம நிர்வாகி யத்தீஸ்வரி ஆத்ம விகாச ப்ரியா அம்பா தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையா வரவேற்றார். மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, துணை சேர்மன் வைத்தியநாதன், நகர செயலாளர் டேனியல்ராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெய்சங்கர், ஆதிகேசவ பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சிவராஜ், கைலாசநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பிரகாஷ், அறங்காவலர் குழு ஏழுமலை, ராதிகா சரவணன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்த 3 எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்
-
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை நிபந்தனையில் திடீர் தளர்வு
-
கட்சி பொதுச்செயலரின் மன்னிப்பு கோரி மல்லை சத்யா உண்ணாவிரதம்
-
3 முக்கிய துறைகளின் ஏற்றுமதி முதல் காலாண்டில் வளர்ச்சி
-
தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயார்: பழனிசாமி
-
பா.ஜ.,வை எதிர்த்து ஹிந்து மகாசபா போட்டி