ராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ராமேஸ்வரம்: தொடர் விடுமுறையால் ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

சுதந்திர தினம், சனி, ஞாயிறு என தொடர் விடுமுறையால் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் கோயில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் தனுஷ்கோடியில் இடிந்த நிலையில் உள்ள சர்ச், ரயில்வே கட்டடம் மற்றும் அரிச்சல் முனை கடற்கரையில் அழகிய கடல் அலையை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

நெரிசல்: நேற்று ஏராளமான வாகனங்கள் வந்ததால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல் வரை போக்கு வரத்து நெரிசல் ஏற் பட்டது. இதனை தவிர்க்க போக்குவரத்து போலீசார் ஒருவழி பாதையாக மாற்றினர்.

இதனால் வாகனங்கள் காட்டுபிள்ளையார் கோயில் தெரு, ஜல்லிமலை, ராமநாதசுவாமி நகர், ஜெ.ஜெ.,நகர், அக்னி தீர்த்த கடற்கரை சாலை முழுவதும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement