ஆம்புலன்ஸ்சில் குவா.. குவா...
தேவிபட்டினம்: தேவிபட்டினத்தில் ஆம்புலன்ஸ்சில் பிர சவத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கர்ப் பிணிக்கு ஆம்புலன்ஸ்சில் அழகான பெண் குழந்தை பிறந்தது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தேவிபட்டினம் கழனிக் குடி சோலை நகரை சேர்ந்த முத்துப்பாண்டி மனைவி கவிதா 23. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் பிரசவத்திற்கு தேவிபட்டினம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஆம்புலன்ஸ்சில் ஏற்றிய சிறிது நேரத்தில் பிரசவ வலி அதிகமாகியது.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரின் உதவியால் ஆம்புலன்ஸ்சிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தேவி பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், தாயையும், குழந்தையும் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பழனி, ஓட்டுநர் கார்த்திக் ஆகியோருக்கு பெண்ணின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும்
-
உயருது முண்டு, நாடு வத்தல்குறையுது துவரம் பருப்பு விலை
-
என் உதவியாளருக்கு கொலை மிரட்டல்
-
'கொடை'யில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் 2வது நாளாக நீடித்த நெரிசலால் அவதி
-
அமைச்சர் மீதான அமலாக்கத்துறை சோதனை முன் கூட்டியே எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்
-
மூணாறில் குவிந்த சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலால் தவிப்பு
-
'திராவிடம் இல்லாத தமிழகம் உருவாக்க முயற்சி'