கிணற்றில் இறந்து கிடந்த ஆண் மயில்
ஆத்துார், :ஆத்துார், அம்மம்பாளையம் ஊராட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் மோகன், 50. இவரது விவசாய கிணற்றில் நேற்று மதியம், 3:30 மணிக்கு ஆண் மயில் தவறி விழுந்து இறந்து கிடந்தது.
இதை அறிந்து, அங்கு சென்ற ஆத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள், கிணற்றில் இறங்கி, மயிலின் உடலை மீட்டு, ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மயில் இறப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement