கால்நடை ஆய்வாளர் பணிக்கு டிகிரி அவசியம்

சென்னை: கால்நடை பராமரிப்பு துறையில், கால்நடை ஆய்வாளர் பணிக்கு, இனி பட்டப்படிப்பு அவசியம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை ஆய்வாளர் பணியில் சேர, பிளஸ் 2 முடித்தவர்கள், 11 மாதங்கள் அத்துறையில் ஊதியம் இல்லாமல் பயிற்சி பெற வேண்டும்.
அதில், தகுதியானோருக்கு, ஆய்வாளர் பணி நேரடி நியமனம் வாயிலாக வழங்கப்பட்டது. அவர்கள் ஐந்தாண்டு பணி முடித்த பின், நிலை - 2 பதவி உயர்வு வழங்கப்பட்டது.
தற்போது, நேரடி நியமனம் ரத்து செய்யப் பட்டுள்ளதால், இனி இந்த பணியில் சேர, பிளஸ் 2 வகுப்பில் தாவரவியல், விலங்கியல் பாடங்களை படித்திருப்பதுடன், பட்டப்படிப்பையும் முடித்து இருக்க வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும். இதற்காக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement