மனைவி புகார் கணவர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அடுத்த தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப். இவரது மனைவி ரோகிணி, 24; கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து. ஒரு பெண் குழந்தை உள்ளது. ரோகிணியை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் துன்புறுத்தியதுடன், உமாமகேஸ்வரி, 29; என்ற பெண்ணை பிரதீப்பிற்கு 2வது திருமணம் செய்து வைத்தனர்.

ரோகிணி அளித்த புகாரின்பேரில், பிரதீப், மாமியார் சீதாலட்சுமி, மாமனார் பெரியசாமி, உமாமகேஸ்வரி உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

Advertisement