ஜார்க்கண்டில் என்கவுன்டர்: ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை

ராஞ்சி: ஜார்க்கண்டில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், தடைசெய்யப்பட்ட சிபிஐ மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட சஹ்தேவ் சோரன் உட்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் உடன் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பதுங்கி இருந்த மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். பின்னர் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தடைசெய்யப்பட்ட சிபிஐ மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட சஹ்தேவ் சோரன் உட்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


மேலும்
-
இயல்பு நிலைக்கு மாறிய நேபாளம்; முக்கிய துறைகளுக்கு 3 அமைச்சர்கள் நியமனம்
-
முப்படை தளபதிகள் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
-
அரசியலமைப்பு சட்டத்தை சுப்ரீம் கோர்ட் பாதுகாக்கும்: வக்ப் சட்ட திருத்தம் குறித்து தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு
-
விதிமுறைகள் மீறப்பட்டு இருந்தால் …: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை; இன்று மட்டும் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
-
பார்லியில் இயற்றப்படும் சட்டத்தை நிராகரிக்க முடியாது: சுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜூ வரவேற்பு