பேட்டரி திருடிய வாலிபர்களுக்கு தர்ம அடி
கோவை; சரவணம்பட்டியில், மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை சேகரிக்கும் வாகனங்களில் பேட்டரி திருடிய இருவரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
சரவணம்பட்டி, காந்திமா நகர் பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை சேகரிக்கும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு, இரு வாலிபர்கள், வாகனங்களில் பேட்டரி திருடிக் கொண்டிருந்தனர். இதனை கண்ட பொதுமக்கள், அவ்விருவரையும் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த சரவணம்பட்டி போலீசார், இருவரையும் மீட்டு விசாரணை செய்ததில், சிங்காநல்லுாரைச் சேர்ந்த பாலு, 36, புளியகுளத்தை சேர்ந்த ரவி,35 என்பது தெரியவந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆஸி.யில் இந்தியரின் பிரபல உணவகத்தில் விஷ வாயு கசிந்து விபத்து: ஊழியர் மூச்சுத் திணறி பலி
-
தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ்க்கு பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது: அண்ணாமலை புகழாரம்
-
எம் எஸ் சுப்புலட்சுமியின் 109 ஆவது ஜெயந்தி விழா
-
சார்லி கிர்க் படுகொலையை கொண்டாடியவர்களுக்கு ரத்தாகிறது விசா: அமெரிக்கா அறிவிப்பு
-
இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை; ஒப்பந்தம் ஏற்படுமா என எதிர்பார்ப்பு
-
ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
Advertisement
Advertisement