ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்க 30ம் தேதி கடைசி நாள்

புதுடில்லி: யு.பி.எஸ்., எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை வருகிற 30ம் தேதிக்குள் தேர்வு செய்யுமாறு அரசு ஊழியர்களை நிதியமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல், மத்திய அரசு ஊழியர்களுக்கான என்.பி.எஸ்., எனப்படும் தேசிய ஓய்வூதிய முறையில் இருந்து, யு.பி.எஸ்., திட்டத்தை தேர்ந்தெடுப்பதை, மத்திய அரசு விருப்ப திட்டமாக அறிமுகப்படுத்தியது.
மேலும், தகுதி வாய்ந்த ஊழியர்கள் மற்றும் என்.பி.எஸ்.,சின் கீழ் ஓய்வு பெற்றவர்கள், யு.பி.எஸ்., திட்டத்தை தேர்வு செய்வதற்கான கடைசி நாள் வருகிற 30ம் தேதியுடன் முடிவடைகிறது.
கடைசி நிமிட சிரமங்களை தவிர்க்கவும், பயனாளர்களின் கோரிக்கைகளை சரியான நேரத்தில் செயல்படுத்துவதை உறுதி செய்யவும், அனைத்து தகுதியுள்ள ஊழியர்களும் காலஅவகாசத்திற்கு முன்பே தங்கள் விருப்பத்தை தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
தற்போது என்.பி.எஸ்.,சில் உள்ள பயனாளர்கள், காலக்கெடு முடிந்தபின் யு.பி.எஸ்., திட்டத்தை தேர்வு செய்ய முடியாது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 20ம் தேதி வரை கிட்டத்தட்ட 31,555 மத்திய அரசு ஊழியர்கள் யு-.பி.எஸ்., திட்டத்தை தேர்ந்தெடுத்துஉள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்
-
சிங்கபெருமாள் கோவிலில் வீடு புகுந்து நெல்லை வாலிபர் அடித்து கொலை
-
மின்மாற்றியை சுற்றி தேங்கும் தண்ணீர் அகற்றப்படுமா?
-
திருப்போரூர் புறவழி சாலையில் கனரக வாகனங்களால் இடையூறு
-
4,500% லாபத்தை அள்ளிய வாரன் பபெட் நிறுவனம்
-
புதிய கட்டட பணியால் துாசி பறந்து அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
-
நவீன எரியூட்டு மையம் பழுது அச்சிறுபாக்கம் பேரூராட்சி அலட்சியம்