பக்க வாத்தியங்களாக மாறிய தி.மு.க., கூட்டணி கட்சிகள்

@quote@ கரூரில், த.வெ.க., பிரசாரத்தில், கூட்டத்துக்கு தகுந்தாற்போல, கூடுதல் எண்ணிக்கையில் காவலர்களை பணியமர்த்தவில்லை; 41 பேர் உயிரிழப்புக்கு காவல்துறையே காரணம்.

கரூர் சம்பவத்தில், தி.மு.க., அரசின் தவறுகளை மறைக்கவே, பிரச்னையை மடைமாற்றும் விதமாக, கச்சத்தீவு விவகாரத்தை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். வெளியில் நடக்க முடியாத அளவிற்கு ஒரு கட்சியின் தலைவருக்கே அச்சம் வருகிறது என்றால் தமிழகம் எந்த அளவுக்கு தாழ்ந்துள்ளது? கருர் வந்த பா.ஜ., -- எம்.பி.,க்கள் குழு பற்றி பேச, திருமாவளவன் யார்? தி.மு.க., மெயின் பாட்டு பாடினால், அதற்கு, பக்க வாத்தியங்களாக, தி.மு.க., கூட்டணி கட்சிகள் இருக்கின்றன. -- பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,quote

Advertisement