200 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அதிகரிப்பு
சென்னை:மாநில மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
விழுப்புரத்தில் உள்ள தக்ஷசீலா மருத்துவ கல்லுாரியில், 50 எம்.பி.பி.எஸ்., இடங்களை துவங்க, தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
அதேபோல், ஒசூரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லுாரியில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள், நாமக்கல்லில் உள்ள விவேகானந்தா மருத்துவக் கல்லுாரியில் 50 இடங்கள் அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து அந்த இடங்கள், மாநில மருத்துவ கலந்தாய்வு பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன.
நாடு முழுதும் வெவ்வேறு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, மருத்துவ இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதால், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன் முடிவுகள் வெளியான பின், தமிழகத்தில் மாநில மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு துவங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
மின் கம்பிகளில் சிக்குவதால் மயில்கள் இறப்பு அதிகரிப்பு
-
பாய்லர் வெடித்து சிறுமி பலி குடும்பத்தினர் மூவர் காயம்
-
ஊட்டச்சத்து திட்டம் சரிவர செயல்படவில்லை அதிகாரிகள் பாராமுகம் ; சத்துமாவு, முட்டை பெயரளவில் வினியோகம்
-
பா.ஜ., இளைஞர் அணி தலைவர் கொலை; பல்லாரி போலீசில் 4 வாலிபர்கள் சரண்
-
மாவட்ட மாரத்தான் போட்டி கல்லுாரி மாணவி முதலிடம்
-
52வது நாளாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம்; அரசு பேச்சு வார்த்தைக்கு முன்வர எதிர்பார்ப்பு