மங்கலம் கதிரவன் பள்ளி மாணவர்கள் அபாரம்

திருப்பூர்;மங்கலம், கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கம், ஸ்ரீயோகாலயா ஆகியன இணைந்து மாநில அளவிலான யோகா போட்டியை நடத்தின.

கதிரவன் பள்ளி மாணவர்கள் 28 பேர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் வெற்றி பெற்று பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பரிசாக வென்றனர். சிறப்பு பிரிவில் ஆறு மாணவர்கள் சிறப்பு பரிசாக கேடயத்தைப் பெற்றனர்.

வெற்றி பெற்றோரை தாளாளர் ஸ்ரீசரண்யா ராஜ்குமார், முதல்வர் காந்தி பிரியதர்ஷினி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

Advertisement