மாசற்ற தீபாவளி கொண்டாடுங்கள்: பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

சென்னை: விபத்து,ஒலி இல்லாமல் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு, பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடு திருநாளாகும்.இந்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை
வெடித்து மகிழ்ச்சியைவெளிப்படுத்துவார்கள்,
அதேவேளையில் பட்டாசுகளை வெடிப்பதால்,நம்மை சுற்றியுள்ள நீர் காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசுவெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும்காற்று மாசினால் சிறுகுழந்தைகள். வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2018- அக்டோபர் 23 ஆம் தேதியில் அறிவித்த ஆணையில் சுற்றுலுக்கு உகந்தமூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும்எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் பணம் நிபந்தனைகளை விதித்தது.
மேலும், உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளைவெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு
ஏற்படுத்த வேண்டும் எனவும். திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில்மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீப்பின் அடிப்படையில், தமிழக அரசு 2015- ஆம்ஆண்டிலிருந்து முதல் இரவு 7 முதல் 1 மணி வரையில் மட்டுமே ஒலிஎழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு
நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டைப் போலே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுக்குழல் சீர்கேடு குறித்தும் உடல்நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்பணர்வு ஏற்படுத்த தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள
பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணழிவு
ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை உயர்கல்வித்துறை மற்றும் குறு சிறு மற்றும்நடுத்தர தொழில்முனைவோர் ஆகிய துறைகளின் செயலாளர்கள், காவல்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குநர்,மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் உச்சநீதிமன்றம் ஆணையின்படி,
நடவடிக்கை எடுக்க அனைத்து கலெக்டர்களும் தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
சுற்றுச்குழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு. பொதுமக்கள் கீழ்கண்டவற்றைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:-
பாதுகாப்பான தீபாவளிக்கு பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை
1. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும் குறைந்த அளவில் காற்றுமாசுபடுத்தும்
தன்மையும் கொண்ட பசுமைபட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
2. மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு
அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்கவேண்டும்.
தவிர்க்கவேண்டியவை
1. அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை
தவிர்க்கவேண்டும்.
2. மருத்துவமனைகள், வழிபாட்டுதலங்கள் மற்றும் அவைதி காக்கப்படும்
இடங்களில் பட்டாசுகள் தவிர்க்க வேண்டும்.
3. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து இந்த தீபாவளியை மாசற்ற தீபாவளியாக மாற்ற தமிழக அரசு மற்றும் தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அனைவருக்கும் இதயங்கனிந்த மாசற்ற தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
இவ்வாறு தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.