இன்று 6 மாவட்டம்; நாளை 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை: தமிழகத்தில் இன்று (அக் 15) 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
வரும் அக் 19ம் தேதி, தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள - கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இன்று (அக் 15) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு அலெர்ட்), கடலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 22 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (அக் 16) கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 17ம் தேதி சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (1)
selva - ,
15 அக்,2025 - 17:10 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பிரேசிலை வீழ்த்தியது ஜப்பான் * கால்பந்து அரங்கில் முதன் முறையாக...
-
போக்குவரத்து பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ்: அமைச்சர் சிவசங்கர்
-
தீபாவளி பண்டிகைக்கு 275 சிறப்பு இணைப்பு பஸ்கள்: தமிழக அரசு அறிவிப்பு
-
பல ரவுடிகளை பார்த்துவிட்டு வந்திருக்கிறேன்; அண்ணாமலை
-
அதிவேக ரயில் போக்குவரத்தால் நாட்டின் பொருளாதார வளம் பெருகும்!
-
2030ல் இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி!
Advertisement
Advertisement