கணவன் மாயம் மனைவி புகார்

பண்ருட்டி: கணவன் மாயமானது குறித்து மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

பண்ருட்டி அடுத்த தாழம்பட்டு கிழக்கு தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை,42; கூலி தொழிலாளி; இவர் நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

இதுகுறித்து அண்ணாதுரை மனைவி தைரியலட்சுமி,37; கொடுத்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Advertisement