நவ.,15ல் தண்ணீர் மாநாடு; அறிவித்தார் சீமான்

சென்னை: தஞ்சையில் நவ., 15ம் தேதி தண்ணீருக்காக மாநாடு நடத்தப்போவதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக, மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, ஐம்பூதங்களை அடிப்படையாகக் கொண்டு, நிலம், நீர்,வானம், நெருப்பு, காற்று மாநாடு நடத்தப்படும் என்று சீமான் அறிவித்திருந்தார். தேனியில் ஆடு, மாடு மாநாட்டை நடத்திய அவர், தர்மபுரியில் மலைகளின் மாநாட்டையும்த நடத்தினார். தூத்துக்குடியில் கடல் மாநாட்டையும் நடத்துவதாக அறிவித்த சீமான், கடலில் அப்பகுதி மக்களுடன் சென்று ஆய்வு நடத்தினார்.
இந்த நிலையில், தஞ்சையில் நவ., 15ம் தேதி தண்ணீருக்காக மாநாடு நடத்தப்போவதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். திருவையாறு தொகுதியில் கல்லணை அருகே உள்ள பூதலூர் இந்த மாநாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும்
-
ஸ்கூட்டர் மீது பஸ் மோதி ஒருவர் பலி
-
'புல்லட்' மீது மோதிய ஆம்னி பேருந்து கணவர் கண்ணெதிரே மனைவி பலி தீபாவளி ஷாப்பிங் சென்று திரும்புகையில் துயரம்
-
புரட்டாசி முடிந்ததால் குவிந்தது கூட்டம் மீன் விலை இருமடங்கு உயர்வு
-
துணை ஜனாதிபதி வீட்டிற்கு குண்டு மிரட்டல்
-
உணவில் தலைமுடி: விமான நிறுவனம் பயணிக்கு ரூ.35,000 வழங்க உத்தரவு
-
நவ., 3ல் துவங்குது புத்தாக்க மாநாடு