ஐதராபாத் வந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் பீதி
மும்பை: சவுதி அரேபியாவில் இருந்து ஐதராபாத் வந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர். இந்த அச்சுறுத்தலால் விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது; இன்று அதிகாலை 5.25 மணியளவில் விமானநிலைய செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையத்திற்கு ஒரு இமெயில் வந்தது. பபிதா ராஜன் என்ற பெயரில் வந்த அந்த இமெயிலில், 'ஐதராபாத்தில் விமானம் தரையிறங்குவதை தடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஐஎஸ் பயங்கரவாதிகள் விமானத்தில் பயணிக்கின்றனர். 1984ல் சென்னை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்று ஐதராபாத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்,' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு, விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து, விமானத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இறுதியில், இது வெறும் புரளி என தெரிய வந்தது.
இருப்பினும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர், இவ்வாறு கூறினர்.
மேலும்
-
அக்டோபர் மாதம் கார் விற்பனை அமோகம்; 5 லட்சத்தை தாண்டி புதிய உச்சம்
-
அரசு நிர்வாகம் முடக்கம்: விரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் என்கிறார் டிரம்ப்
-
அசாருதீனுக்கு அமைச்சர் பதவி; காங்கிரஸ் முடிவுக்கு பலன் கிடைக்குமா?
-
ஜெயலலிதா இருந்திருந்தால் செங்கோட்டையனுக்கு எம்.எல்.ஏ., பதவி கூட கிடைத்திருக்காது: பழனிசாமி
-
வரலாற்றில் முதல்முறையாக ராணுவ நடவடிக்கைக்கு சுதந்திரம் கொடுத்தார் பிரதமர்: ராணுவ தளபதி திரிவேதி பெருமிதம்
-
புகழ்ந்து பேசினால் தான் இங்கே புத்தகம் விற்க முடியும்; பதிப்பாளர்கள் படும் அவதிக்கு அளவே இல்லை!