உயர்மட்ட பாலத்தில் எரியாத விளக்குகளால் ஓட்டுனர்கள் அவதி
கரூர், கரூர் அருகே வெங்ககல்பட்டி உயர்மட்ட பாலத்தின், இணைப்பு சாலைகளில், உயர் மட்ட மின் கம்பத்தில் உள்ள விளக்குகள் சரிவர எரியாமல் உள்ளது.
கரூர் - திண்டுக்கல் பழையசாலை, வெங்ககல்பட்டியில், திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே, சில ஆண்டுகளுக்கு முன் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. அதன் வழியாக, வெள்ளியணை, குஜிலியம்பாறை, பாளையம், திண்டுக்கல் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளுக்கு பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன.
அதை தவிர வெள்ளியணை உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேலைக்காகவும், மாணவ, மாணவியர் பள்ளி, கல்லுாரிகளுக்காகவும், உயர்மட்ட பாலம் வழியாக கரூர் நகருக்கு செல்கின்றனர். 2020ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது, உயர்மட்ட பாலத்தில், சர்வீஸ் சாலையின் இரண்டு பக்கமும், நடுப்பகுதியில் உயர் மட்ட மின் கம்பத்தில் விளக்குகள் அமைக்கப்பட்டது. தற்போது, பெரும்பாலான விளக்குகள் எரிவது இல்லை.
இதனால், வெங்ககல்பட்டி பாலம் வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, பாலத்தின் சர்வீஸ் சாலையில் உள்ள, அனைத்து உயர்மட்ட மின் கம்பத்தில் உள்ள விளக்குகளையும் எரிய, வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
மேலும்
-
ஆஸி.,க்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட்: இந்தியா பவுலிங்
-
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய 16 பேர் நாடு கடத்தல்
-
இன்று மாலை 5.26 மணிக்கு விண்ணில் பாய்கிறது செயற்கைக்கோள்; தினமலர் இணையதளத்தில் லைவ் பாருங்க!
-
மெக்சிகோவில் சோகம்; சூப்பர் மார்க்கெட்டில் தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழப்பு
-
திமுகவின் கபட நாடகத்தை மக்கள் நம்ப தயாராக இல்லை: விஜய்
-
வாக்காளர் பட்டியல் திருத்தம் எதிர்த்து வழக்கு: முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு