விவசாயியை தாக்கியவர் கைது 

புவனகிரி: வயலில் மாடு மேய்ந்த பிரச்னையில் விவசாயியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

புவனகிரி அருகே செட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். 32; விவசாயி.

இவருக்கு சொந்தமான வயலில், அதே பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் என்பவரின் மாடு மேய்ந்து பயிர்களை சேதப்படுத்தியது.

இதனால் இரு தரப்பினர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

இதில் ஆவேசமடைந்த மனோஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் ஆனந்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து மனோஜ்குமாரை கைது செய்தனர்.

மற்ற இரு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement