மாணவி மாயம் போலீஸ் விசாரணை

சின்னசேலம்: சின்னசேலம் அருகே கல்லுாரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சின்னசேலம் அடுத்த இந்திலி, காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியன் மகள் தீபிகா, 19; தனியார் கல்லுாரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 8:00 மணியளவில் கல்லுாரிக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

முனியன் அளித்த அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement